May 22, 2012

12 th Result

சென்னை: தமிழகம் முழுவதும் நடந்து முடிந்து பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இந்த முடிவின்படி நாமக்கல்லை சேர்ந்த மாணவி சுஸ்மிதா முதலிடத்தையும், 2 வது , 3 வது இடத்தையும் நாமக்கல் மாவட்ட மாணவிகளே பிடித்தனர். தேர்வு முடிவை தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தரா தேவி வெளியிட்டார்.


கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி துவங்கிய இந்த தேர்வில் 7 லட்சத்து 60 ஆயிரத்து 975 மாணவ, மாணவிகள் எழுதினர். முடிவுகள் அந்தந்த பள்ளிகளிலும் ஒட்டப்பட்டன. வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.


முதல் 3 இடங்களை பிடித்தவர்கள்: முதல் ரேங்க், சுஸ்மிதா ( 1189 மார்க்குகள்) எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி , நாமக்கல், இரண்டாமிடம் ; கார்த்திகா, அசோக்குமார், மணிகண்டன் ஆகிய 3 பேரும் 2 ம் இடத்தை பிடித்துள்ளனர், நாமக்கல், 3 ம் இடத்தை 2 பேர் பிடித்துள்ளனர். முதல் 3 இடங்களையும் மொத்தமாக நாமக்கல் மாவட்டம் அள்ளியது.




Thanks to dinamalar

Apr 28, 2012

Tancet Results 2012